வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டரங்கில் சிலம்பம் வீரர்களுக்கு பாராட்டு விழா, நாக்பூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும்
வெள்ளி பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கூட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment