நீலகிரி மாவட்டம், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சப்பணம் வாங்கிய நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர் நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் (வயது 40), இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவிப் பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி நிர்வாகம் இவரை பணி நிரந்தரம் செய்ய கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை இவரை பணி நிரந்தரம் செய்ய மறுப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிரந்தர பணி நிரந்தரத்திற்கான உத்தரவு ஆணையைப் பெற்றார். இவ்வளவு காலம் பணியாற்றியதற்கான நிலுவை தொகையை ரூ.20 முதல் ரூ.25 லட்சம் இவருக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் இவருக்கு பணி நிரந்தர உத்தரவு மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் சிபு மானிக் மீண்டும் மனு தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அவருக்கு நிலுவைத் தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பணி ஆணை மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்க வலியுறுத்தி ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷை அணுகியுள்ளார்.
இவருக்கு பணி ஆணை மற்றும் நிலுவைப் பணத்தை கொடுப்பதற்கு லஞ்சமாக ரூ.5 லட்சம் பணத்தை நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் கேட்டுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.2 லட்சம் பணம் தர முடிவு ஆகியிருக்கிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து ஜான் சிபு மானிக் நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவலா ஆய்வாளர் சண்முகவடிவிடம் புகார் மனு அளித்துள்ளார். பின்னர்,
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் பவுடர் தடவிய ரூ.2 லட்சப் பணத்தை புகார்தாரரான ஜான் சிபு மாலிக்கிடம் கொடுத்து லஞ்சம் கேட்டு அதிகாரியிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர்
ஊட்டி பிங்கர்போஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியிலுள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ் வீட்டில் வைத்து அவரிடம் 2. லட்சம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது லஞ்ச்பணத்தை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் சாதன பிரியா, சக்தி, ரங்கநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்திய பிறகு வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர். நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் லஞ்சம் பெற்றச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment