Tuesday, 18 February 2025

வேலூரில் பெண் மருத்துவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளி சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்.. 23 ஆயிரம் அபராதத்துடன் தீர்ப்பு!

வேலூரில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு திரைப்பட காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.

இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்கே செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏறுங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர், அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் மருத்துவரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் மருத்துவர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் இரவு நேரங்களில் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட 4 பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டார். இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் விசாரணை குறிப்புகள் அடங்கிய 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல் துறையினர், வேலூர் போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்த வேலூர் மாவட்ட மகிளா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா, பார்த்திபன், பரத், சந்தோஷ் குமார், மணிகண்டன் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் 5-வது குற்றவாளியாக 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவனும் சேர்க்கப்பட்டிருந்தான்.

அந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் சிறுவன் குற்றம் இழைத்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுமகேஸ்வரி  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 23 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...