Wednesday, 19 February 2025

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு நீதியரசர் ராஜமாணிக்கம் நியமனம்!

தமிழ்நாடு லோக்​ ஆ​யுக்தா தலைவராக நீதித்​துறை உறுப்​பினராக இருந்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கத்தை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர​விட்​டுள்​ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை செயலர் ஜி.பிரகாஷ், ஐஏஎஸ்., வெளியிட்டுள்ளார்.

தமிழ்​நாடு லோக் ஆயுக்தா சட்டப்​படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்​டுள்​ளது. பொது ஊழியர்​களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். ஒரு தலைவர், 2 நீதித்துறை உறுப்​பினர்​கள், நீதித்​துறை சாரா 2 உறுப்​பினர்கள் இந்த அமைப்பில் இருப்​பார்​கள். இதில், தலைவர் மற்றும் நீதித்துறை சாராத உறுப்​பினர்கள் பணியிடம் காலியாக இருந்த நிலை​யில், தகுதியானவர்களை தேர்வு செய்​யும் பணி நடைபெற்​றது.

இதைத் தொடர்ந்து, தற்போது நீதித்துறை சார்ந்த உறுப்​பினராக உள்ள சென்னை உயர்​நீ​தி​மன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜ​மாணிக்​கம், லோக் ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்​டுள்​ளார். காலியாக உள்ள நீதித் துறை சாரா உறுப்பினர்கள் இடங்​களுக்கு நாமக்கல் மாவட்​டத்தைச் சேர்ந்த மாவட்ட நுகர்வோர் விவகாரங்கள் குறைதீர்வு ஆணையத்​தின் தலைவர் வி.ராம​ராஜ், வருமானவரி மேல்​முறை​யீட்டு தீர்ப்பாயத்​தின் முன்​னாள் உறுப்​பினர் ஆறுமுக மோகன் அலங்​காமணி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு, நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்ள ஓய்வு நீதியரசர் ராஜமாணிக்கம் 2027 ஏப்ரல் 17-ம் தேதி வரை பதவி​யில் இருப்​பார். என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...