தமிழ்நாட்டில், 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ,ஐஏஎஸ்., பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் அவ்வப்போது முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா, ஐபிஎஸ்., தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யன், ஐபிஎஸ்., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரத்திற்கு உட்பட்ட கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி, ஐபிஎஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் , ஐபிஎஸ்., சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார் , ஐபிஎஸ்., பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரத்திற்குட்பட்ட கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி, ஐபிஎஸ்., நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு ,ஐபிஎஸ்., பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 4 ஐபிஎஸ் காவல்துறை அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி ஷானாஸ் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமார் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் கோவை தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஏ.எஸ்.பி சிவராமன் ஐபிஎஸ், எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் டவுன் ஏ.எஸ்.பி சிபின், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு, திருச்சி வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ,ஐஏஎஸ்., பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment