Sunday, 26 January 2025

ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு 85ஆவது ஜெயந்தி விழா கோலாகலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தை நிறுவிய ஸ்தாபகருமான ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு 85 வது ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளின் 85 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் ஸ்ரீ பாலமுருகன் அலங்கரிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளின் 85 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசனமும் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுருகன் அடிமை சாமிகளை தரிசித்து அவரது 85ஆவது ஜெயந்தி விழாவில் அவரிடம் ஆசி பெற்றனர். அதேபோன்று ஸ்ரீ பாலமுருகனையும் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரத்தினகிரி கோயில் நிர்வாகம் செய்திருந்தது. தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...