Thursday, 30 January 2025

காட்பாடி அரும்பருதியில் எம்.எல்.ஏ நிதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டிய பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்குடையை திறந்து உட்கார்ந்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பருதி ஊராட்சியில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி, ஐஏஎஸ்., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிறகு ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தும் நிழற்குடையை திறந்து வைத்து உட்கார்ந்தனர். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார், மாநகராட்சி 1வது மண்டலக் குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக்  கொண்டனர்.

No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...