உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவுச் செய்வதற்காக ரூ.20, ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஜியாவுதீன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது மூதாதையரின் சொத்துக்களை பங்கு பிரித்து பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை அனுப்பியுள்ளார்.
அப்போது மகாராஜாவிடம், சார்பதிவாளர் ஜியாவுதீன் பத்திரம் பதிவு செய்வதற்கு முதலில் ரூ. 40, ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பேச்சு வார்த்தைக்கு பின் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருகிறேன் என சார்பதிவாளர் ஜியாவுதீன் கராராக கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டு மனம் உடைந்துபோன மகாராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. அவர் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி புகார்தாரரான மகாராஜாவிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூபாய் தொகையை கொடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஜியாவுதீனிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் மகாராஜாவும் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை சார் பதிவாளர் ஜியாவுதீனிடம் கொடுத்துள்ளார். லஞ்சப் பணத்தை தான் வாங்காத ஜியாவுதீன், தனக்கு வேண்டிய பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசனிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
அதன்படி அவரிடம் மகாராஜா ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அவர் பணத்தை வாங்கிக் கொண்ட போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பத்திர எழுத்தாளரின் உதவியாளர் எட்டிசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து லஞ்சம் வாங்க மூளையாக செயல்பட்ட சார்பதிவாளர் ஜியாவுதீன் மற்றும் எடிசன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். சார்பதிவாளர் ஜியாவுதீன் கையூட்டுப் பெற்று பத்திர எழுத்தாளரின் உதவியாளருடன் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment