வேலூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் மாமுல் வசூல் வேட்டையில் சுற்றிவரும் பலே கில்லாடி போலீஸ்காரர் விமல், ஆனால். இவர் போலீஸ்காரராக பணிபுரிவதோ ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலப்பற்ற வேலை செய்வதோ வேலூரில் எனவே இதுகுறித்து துரித விசாரணை நடத்திய பிறகு தமிழ்நாடு டிஜிபி சாட்டையை சுழற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறார்கள் என்று காவல்துறை மேலதிகாரிகள்!
இவர் பணிபுரிவதோ இராணிப்பேட்டை மாவட்டத்தில். இவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் பல்வேறு விரும்பத்தகாத வேலைகளில் மாமூல் வசூலிப்பது என்பது வேலூர் பகுதியிலுள்ள வேலூர் தெற்கு காவல் நிலையம், வேலூர் வடக்கு காவல் நிலையம், வேலூரிலுள்ள பாகாயம் காவல் நிலையம், வேலூரிலுள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் அரியூர் காவல் நிலையம் ஆகிய வேலூர் காவல் உட்கோட்டம் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இவர் புகுந்து விளையாடுகிறார். நாள் ஒன்றுக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 80 ஆயிரம் வரை வசூல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கடமை தவறாத போலீஸ்காரர். பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல காணப்படும். இந்த போலீஸ்காரர் நெற்றியில் குங்குமப்பொட்டும் மற்றும் செந்தூரமும் வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவர் போல வெளித்தோற்றத்திற்கு தென்படுகிறார். ஆனால் இவர் செய்யும் வேலையோ மிகவும் கொடூரமான அடுத்தவர் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி வசூல் வேட்டைச் செய்வதில் வல்லவர் பெற்றவர் இந்த போலீஸ்காரர். விபச்சார அழகிகளை யார் என்று அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடம் மாமூல் வசூல் வேட்டைச் செய்வது மற்றும் சிறிய வயதுடைய இளமையான பெண்களை தேர்வு செய்து பயன்படுத்தி விளையாடுவது மற்றும் பலானத் தொழிலுக்கு முதல்முறையாக வரும் இளம் பெண்களை முதன் முதலில் பாலியல் இச்சை அனுபவிப்பது என்று இவர் ஏதோ பெரிய காவல்துறையில் ஒரு அதிகாரி போல தன்னை காண்பித்துக் கொண்டு வலம் வந்து கொண்டுள்ளார். இப்படி காவல்துறையிலுள்ள ஒரு கருப்பு ஆடு பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் மெல்ல மெல்ல கசியத் தொடங்கியுள்ளது.
இப்படி மாமூல் வசூல் வேட்டைச் செய்வதில் ஏதோ ஒரு தொகையை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல போட்டுவிட்டு இவர் தன்னை நல்லவர் போல உத்தமர் போல காட்டிக் கொண்டு வலம் வந்து கொண்டுள்ளார். இந்த சமூக விரோதி. இப்படி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை தன்னுடன் இணக்கமாக வைத்துக் கொண்டு கனிமவள மணல் மாஃபியாக்கள் மற்றும் மணல் கடத்தல், மண் கடத்தல், சாராய வியாபாரிகள், ஒன் நம்பர் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம், விபச்சார விடுதி உள்ளிட்ட பல்வேறு விரும்பத் தகாத சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிடம் மாமூல் வசூல் செய்து எடுத்துக் கொள்வது என்று இந்த வேலையிலேயே இவர் கவனம் செலுத்தி சுற்றிக் கொண்டுள்ளார்.
இவர் போலீஸ்காரராக பணிபுரிவது ராணிப்பேட்டை மாவட்டத்தில். வாழ்நாளில் இவர் வசூல் செய்வது வேலூரில். இது எப்படி நியாயம். இதை யாரும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் அவர்களுக்கு மாமூலிலிருந்து ஒரு தொகையை சிறு தொகையை கொடுத்துவிட்டு இவர் எஸ்கேப் ஆகிவிடுகிறார். ஆனால் இவர் வசூல் செய்வதோ பெருந்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுற்றித்திரிந்து கொண்டு உள்ளார். அத்துடன் கட்டப் பஞ்சாயத்து செய்யும்போது இந்த பணமெல்லாம் திரும்பி வராது. இதெல்லாம் வரும். இப்படி இவராகவே முடிவு செய்து கொண்டு ஒரு நீதிபதி போல இவர் என்னமோ தீர்ப்பு கொடுத்துக் கொண்டு சுற்றித்திரிந்து வருகிறார் இந்த கடமை தவறாத போலீஸ்காரர் விமல். இந்த விமலை உரிய வகையில் கைது செய்து விசாரித்தால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என்பது மட்டும் நிதர்சன உண்மை .அதற்கு காவல்துறை தயாரா? என்பது தெரியவில்லை. தமிழ்நாடு காவல்துறை தலைவர் அதாவது டிஜிபி சங்கர் ஜூவால், ஐபிஎஸ்., இவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டால் உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவர் தனக்கு சம்பந்தப்படாத விஷயங்களில் தலையிடுவது, அதில் ஒரு லாபம் பார்ப்பது என்று இவர் தொழிலை செய்து கொண்டு இவர் ஹாயாக, மஜாவாக வாழ்க்கையை வாழ்ந்து வலம் வந்து கொண்டுள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
எனவே இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், ஐபிஎஸ்., தனது தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் ஆகியோரை விட்டு உரிய முறையில் விசாரித்து இவர் என்னென்ன வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். வேலூரில் என்று கணக்கெடுத்தால் இதன் உண்மை கட்டாயம் வெளியில் வரும் என்பது மட்டும் தின்னம். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தற்போது உள்ள விவேகானந்த சுக்லா, ஐபிஎஸ்., உரிய விசாரணை நடத்தினால் அதில் மறைந்துள்ள உண்மைகள் புதையல் போல வெளிவரும் என்பது உறுதி. காவல்துறை விமல் மீது விசாரணை எடுக்கத் தயாரா? என்பது மட்டும்தான் இன்று பொதுமக்கள் மற்றும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் முன் உள்ள ஏகோபித்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. பொதுமக்களும் இவர் காவல் துறையில் பணியாற்றுவதால் இவர் மீது புகார் தெரிவிக்க சற்று தயக்கம் காட்டுகின்றனர். இவரால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் மனதுக்குள் வைத்துக் கொண்டு குமுறுகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் எழுத்தறிவு படிப்பறிவு இல்லாத பாமர மக்களும் பலர் பாதிக்கப்பட்டு மனதிற்குள் வைத்து புழுங்கி கொண்டுள்ளனர் என்பது நிதர்சன உண்மை.
தமிழ்நாடு காவல்துறையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற ரீதியில் பல நேர்மைக்கு பேர் போன போலீசுகாரர்களும் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒரு சூழலில் இது போன்று அருவருத்தக்க செயலில் ஈடுபட்டு வரும் இந்த கடமை தவறாத போலீஸ்காரர் விமல் மீது உரிய முறையில் விசாரணை எடுத்த தயாரா? என்பது மட்டும்தான் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னுள்ள ஏகோபித்த கேள்வி . இது போன்ற களைகளை காவல்துறையிலிருந்து களைந்து எரியுமா? அல்லது மீண்டும் இது போன்ற களைகளுடனே தொடர்ந்து பணியாற்றுமா? என்பது தெரியவில்லை .இதற்குமேலும் தமிழக காவல்துறை என்ன செய்யப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!
No comments:
Post a Comment