Monday, 3 March 2025

தூத்துக்குடியில் புகார் தந்தவருக்கு போலீசார் அனுப்பிய எக்கு தப்பான தேதியில் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

வருடத்தில் விசேஷமான மாதம் என்றால் அது பிப்ரவரி மாதம் தான் பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை 28 நாட்கள் தான் இருக்கும், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிப்ரவரி 29ம் தேதி வரும். கடந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தது. ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் தான் உள்ளது. நிலத்தகராறு புகாரை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போலீசார், பிப்ரவரி 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் நேதாஜி தெருவைச் சேர்ந்த லிங்கத்துரை என்பவருடைய மகன் வசந்த். இவரது பூர்வீக வீடு, தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பூர்வீக வீடு மற்றும் நிலம் தொடர்பாக வசந்துக்கும், அவருடைய உறவினரான செல்வராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தூத்துகுடி தட்டார்மடம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் வசந்துக்கு சம்மன் அனுப்பினர். அதில், "தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் காவல் நிலையத்தில் 29-2-2025 அன்று காலை 10 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்களே இருந்தது. ஆனால் பிப்ரவரி 29-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் தவறுதலாக சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...