Monday, 3 March 2025

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, மாவட்ட ஊராட்சி குழுப் பெருந்தலைவர் மு.பாபு , ஒன்றியச் செயலாளர் பி.வெங்கடேசன், கோ.குமரபாண்டியன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, அந்த துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய குழுப் பெருந்தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...