Monday, 3 March 2025

பெண்களை பற்றி அவதூறாக பேசி வரும் நாதக தலைவர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பு!

சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி. சிவா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியது மட்டுமில்லாமல் சீமான் மீது புகார் கொடுத்த நடிகை பற்றி அவதூறாக பேசியுள்ளார் என்று கூறினார்.

குறிப்பாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சீமான் தைரியமாக பொதுமக்கள் மத்தியில் சவால் விட்டுக்கொண்டு வெளியில் சுற்றி வருகின்ற காரணத்தினால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீமான் மீது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் சம்மன் மட்டும் அனுப்பி வரும் நிலையில், இன்னும் போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...