Monday, 3 March 2025

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றது.

ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

சாதி சான்றிதழ், பட்டா வழங்குவது, நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கோரி, விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால், அவர்களிடம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்களை தந்துவிடுகிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கினால், அவர்களை அப்போதே அதிகாரிகள் கைது செய்கிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், என பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

இதுபோல அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், புகார்கள் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்துவது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் (தரக்கட்டுப்பாட்டு பிரிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனையை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.5.60 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. எனவே, பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேல்மாயில் பகுதியில் நிலத்திற்கு செல்லும் ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷமிகள்!

வேலூர் மாவட்டம், கே. வி .குப்பம் தாலுகா, கே. வி. குப்பம் ஊராட்சி, மேல்மாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி. ராஜேஷ் குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். அவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு உட்பட்ட சர்வே எண் 230 உட்பிரிவு 1Bயிலுள்ள 90 சென்ட் நிலம் ஆகும். இந்த நிலத்திற்குச் செல்லும் வழியில் ஓடை நீர்வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் சில விஷமிகள். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை புகார் மனுவை அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் வருவாய்த்துறை அலட்சியம் காண்பித்து வருகிறது. இது குறித்து மீண்டும் 101வது முறையாக வேலூர் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று நடந்த திங்கள் மனுவில் புகார் செய்துள்ளார் ராணுவ வீரர் ராஜேஷ் குமார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் இந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாகவும், விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ராணுவ வீரர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது.. காட்பாடி ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவர் இரா.சீனிவாசனுக்கு வழங்கி பாராட்டு!!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் துணைத்தலைவர் இரா.சீனிவாசனுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதற்கான விழா தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான `தமிழ்ச் செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள் வரவேற்புரை ஆற்றினார். துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., தொடக்கவுரை ஆற்றினார். 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். 

வேலூர் மாவட்டம் சார்பில் குமரன் இரா.சீனிவாசனுக்கு விருது வழங்கப்பட்டது. அவரை அமைச்சர் துரைமுருகன், டாக்டர்கள் குமரகுரு, இக்ராம். இனியன் சமரசம். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ரோட்டரி தலைவர் பி.என்.ராமசந்திரன். வேலூர் கவிஞர் ம.நாராயணன். உள்பட பலர் வாழ்த்தினார்கள். விருதுபெற்ற சீனிவாசன், குமரன் மருத்துவமனை மேலாளராகவும், ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவராகவும், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க பொருளாளராகவும் உள்ளார்.

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வே.இரா. சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கர்ப்பிணி பெண்களை வாழ்த்தினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, மாவட்ட ஊராட்சி குழுப் பெருந்தலைவர் மு.பாபு , ஒன்றியச் செயலாளர் பி.வெங்கடேசன், கோ.குமரபாண்டியன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, அந்த துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய குழுப் பெருந்தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடனிருந்தனர்.

திருப்பத்தூரில் வேலைக்காக வைத்த பெண் அரசு அதிகாரியை தன் வலையில் வீழ்த்தி ரூ. 2 1/2 லட்சம் பணம் பறித்ததில் கூட்டாளிகளுடன் கைது!

அரசு அதிகாரி என்றும் பாராமல் 2 பெண்கள் செய்த காரியம், திருப்பத்தூரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைதாகியுள்ள நிலையில், அந்த 3 பேருமே வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவருபவர் மாதேஸ்வரன்  இவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை நிலையில் தான்.

தன்னுடைய அம்மாவை பராமரிப்பதற்காக, "சன் லைட் ஹோம் கேர்" என்ற நிறுவனத்தில் பணியாற்றும் நளினி என்பவரை வேலைக்கு வரவழைத்துள்ளார். இதனால் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் நளினி.. இதற்காக மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து கொண்டு, "சன் லைட் ஹோம் கேர்" நடத்தும் செல்வி என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

உடனே செல்வி, அந்த நிர்வாண வீடியோவை, மகேந்திரனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன மகேந்திரன், முதல்கட்டமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்.

ஆனால், மிச்ச பணத்தையும் உடனே தந்தாக வேண்டும் என்று செல்வி தொந்தரவு செய்தாராம். தன்னிடம் பணம் இல்லை என்று மாதேஸ்வரன் சொன்னதால், ஆத்திரமடைந்த செல்வி, தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்பூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவரை, மகேந்திரன் வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வர சொல்லி உள்ளார்.

பணம் வாங்குவதற்கு, வீட்டுக்கே ஆள் வந்து நிற்பதை கண்டு பயந்துபோன மாதேஸ்வரன், போலீசுக்கு ஓடினார். அப்போதுதான், நளினி, செல்வி 2 பெண்களும் சேர்ந்து பிளான் போட்டு, மாதேஸ்வரனிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து விமல்ராஜ் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அரசு அதிகாரியான தலைமை அஞ்சலகத்தின் கண்காணிப்பாளரையே நிர்வாண வீடியோ எடுத்து 2 பெண்கள் மிரட்டிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


பெண்களை பற்றி அவதூறாக பேசி வரும் நாதக தலைவர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பு!

சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி. சிவா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியது மட்டுமில்லாமல் சீமான் மீது புகார் கொடுத்த நடிகை பற்றி அவதூறாக பேசியுள்ளார் என்று கூறினார்.

குறிப்பாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சீமான் தைரியமாக பொதுமக்கள் மத்தியில் சவால் விட்டுக்கொண்டு வெளியில் சுற்றி வருகின்ற காரணத்தினால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீமான் மீது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் சம்மன் மட்டும் அனுப்பி வரும் நிலையில், இன்னும் போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார்.

வேலூரில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்!

வேலூரில் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக்கொண்டு கொடிகட்டி பறக்கிறது விபச்சார தொழில். வேலூர் வள்ளலார் பகுதியில் வசிப்பவர் பானுப்பிரியா(31) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பலரை வீட்டுமனை மற்றும் நிலம் ஆகியவற்றை விற்பனை செய்வதாகவும், பழைய மற்றும் புதிய வீடுகளை வாங்குவது, விற்பது என்று தொழில் செய்து வருவதாக வெளியில் கூறிக்கொண்டு பலரை நம்ப வைத்து ஏமாற்றி நாடகம் ஆடி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக்கொண்டு யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்கிறார்களோ அவர்களை நாடிச் சென்று தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறார் இவர். இந்த விபச்சார தொழிலில் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இவரது கஸ்டடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார். இவர்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5,000 வரையும் ,வெளியில் அழைத்துச் செல்பவர்களுக்கு ரூபாய் 10000 ஆயிரம் வரையிலும் வசூல் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த தொழில் அமோகமாக நடைபெறுகிறது. ஆனால் வெளியில் சொல்வது என்னமோ ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிக்கொண்டு இந்த இளம் பெண்களை அழைத்துக்கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக இவரால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பணம் பறிப்பதை ஒன்றையே தொழிலாக கொண்டு இவர்கள் செயல் படுவதாகவும் தெரிய வருகிறது. இவர் கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளோடு ஒரு மகன், ஒரு மகளோடு வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் செய்யும் தொழிலோ இப்படி ஒரு விரும்பத்தகாத தொழில் என்று தெரியவந்துள்ளது. வேலூரில் தற்போது எளிதில் சம்பாதிக்க இந்த விபச்சார தொழிலை பயன்படுத்திக் கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இவர் ஆட்டோ மற்றும் கார்களில் மட்டுமே பயணம் செய்வாராம். மற்ற எந்த வாகனங்களிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் இவருக்கு காவல்துறை காப்பு கட்டுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட கழக அவைத் தலைவர் வி.பி மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர், மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பையா பாண்டியன், துணைச் செயலாளர் கண்ணன் (எ) ராஜு உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள்.  பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

புதிதாக மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் அதிகாரிகள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியில் இருக்க முடியாது என்ற ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் வந்ததிலிருந்து திமுகவினர் அதிகாரிகளை மிரட்டுவது, வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. திமுக ஆட்சியில் வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி பள்ளி மாணவர்களை ஏமாற்றியுள்ளனர். திமுகவினர் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது.  பெரும்பாலான திமுக நிர்வாகிகளின் குழந்தைகள் இந்தி மொழியை படித்து வருகிறார்கள். திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றவில்லை. கடந்த சில நாட்களாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் அரசு ஊழியர்கள். திமுகவில் முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் தான் உயர் பதவியில் வர முடியும். ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவியில் வரலாம். அதிமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக இருந்தனர். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி மண்டல செயலாளர் சிவ ஆனந்த், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ராமசாமி என்ற ரவி, பரமகுருநாதன், தீக்கணல் லட்சுமணன், சங்கரசுப்பிரமணியன், சந்திரன், செந்தில்குமார். சத்யகலா தீபக், பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், ஜாகிர் உசேன், மகாதேவன், டாக்டர் திலீபன், ஜெய்சங்கர், குட்டி மாரியப்பன், குருசேவ், மதன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், இளசை தேவராஜ், ரவிச்சந்திரன், முத்துப்பாண்டியன், ராமதுரை, செல்வம், மாவட்ட நிர்வாகிகள் சௌந்தர் என்ற சாகுல் ஹமீது, பிஜிபி ராமநாதன், ஆர்.சி  மாரியப்பன், கோபால் ரத்தினம், முத்து மணிகண்டன், கந்தன், லோக சுந்தர், நிவாஸ், எஸ்டிஎஸ் சரவணகுமார், கருப்பசாமி, அமுதா பாலசுப்ரமணியன், நவீன் ராஜ், எம்.எஸ் முருகன், தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் ராமேஸ்வரன், காந்தி குமார், செந்தில்குமார், ராஜ்குமார், தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் ஐயப்பன், நூர்முகமது, நாராயணமூர்த்தி, சங்கரநாராயணன் என்ற நானா, தங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமதுரை, மாரிச்சாமி, ராஜேஸ்வரி, முத்துலட்சுமி, அண்ணாமலை புஷ்பம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், காளிராஜ், நாகரத்தினம், காளியம்மாள், மாரியம்மாள், மகளிர் அணி மாரியம்மாள் ராமலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவை தலைவர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதேபோன்று மார்ச் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் வடை மாலை சாத்தியும், வெற்றிலை மாலை சாத்தியும் பக்தர்கள் ஸ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதற்கு முன்னர் அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து மலர்களாலும், தங்கக் கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் வடைமாலை சாத்தியும், வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தியும் தொடர்ந்து வழிபட்ட வண்ணமாக இருந்தனர். தொடர்ந்து நாள் முழுவதும் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள் பாலித்து வந்தார். பூஜையில் திரளாக கலந்து கொண்டனர் பக்தர்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் இளமின் பொறியாளர் இடைத்தரகருடன் மின் இணைப்பு வழங்க வசூல் வேட்டையில் ஈடுபடும் அவலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மின்வாரிய தெற்கு பகுதி இளமின்  பொறியாளர் மதியரசி. இவருக்கு கீழ் இடைத்தரகர் ஒருவரை வைத்துக்கொண்டு வெங்கடேசன். இராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த லைன்மேன் ராஜேஷ் ஆகியோர் ஒன்று  சேர்ந்து கொண்டு வீட்டிற்கு மின் இணைப்பு பெற ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை ஊராட்சியில் வீட்டு வரி ரசீது இல்லாமல் ஊராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாயை தடுக்கும் வகையிலும் வீட்டு வரி சர்வீஸ் வீட்டுக்கு ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை வணிக வளாகத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு ஊராட்சிகளுக்கு வரக்கூடிய வருவாயை தடுத்து வருகிறார்கள். ஊராட்சிக்கு வரும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சவுத் ஜே.இ. மதியரசி. வரி வருவாயை தடுக்கும் இளமின் பொறியாளர் மதியரசி மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.

பேரணாம்பட்டில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் காட்டு யானைகள்: மெத்தனமாக செயல்படும் வனச்சரகர் சதீஷ்குமார்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பங்களாமேட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளும் பித்தலாட்ட வேலைகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக பேரணாம்பட்டைச் சுற்றியுள்ள. கோட்டையூர், எருக்கம்பட்டு, அரவட்லா, குண்டலபள்ளி, கமலாபுரம் போன்ற கிராமங்களில் காட்டு யானைகள் அவ்வப்பொழுது வந்து கரும்பு தோட்டங்களையும். தென்னை மரங்களையும், நெற்பயிர்களையும் நாசப்படுத்தி விட்டு செல்கிறது. ஒரு சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து பசுக்களை கொன்றும், பொது மக்களை பயமுறுத்திவிட்டும் செல்கிறது. இந்த நிகழ்வுகள் ஒரு நாள் அல்ல, ஒரு வாரம் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஒரு வருடமல்ல, பல வருடங்களாக தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டு யானை ஒன்று தனது துதிக்கையால் தூக்கி வீசி எறிந்தது. அந்தப் பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு களேபரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் வனச்சரகர் சதீஷ்குமார் காட்டில் ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்றவர்களிடமும், பத்திரப்பள்ளி சோதனை சாவடியில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் போன்ற இடங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கும், வேலூர் மார்க்கெட்டிற்கும் தினமும் காய்கனிகளை ஏற்றிவரும் வாகனங்களை மிரட்டி லஞ்சம் வசூலிப்பதிலும், காட்டில் வாழும் முயல், முள்ளம்பன்றி, மான் போன்றவைகளை ஐந்து பேர் வேட்டையாடினால் மூன்று பேரை மட்டும் கணக்கில் காட்டி மீதம் இரண்டு பேர்களின் வசூல் பணத்தை சுருட்டி கொள்வதிலும் பேரணாம்பட்டு மரப்பட்டறைகளில் காட்டு விறகுகளை விற்பனை செய்யும் மரப்பட்டறை உரிமையாளர்களிடம் ரவி என்ற வன ஊழியரை அனுப்பி லஞ்சம் வசூலிப்பதிலும் ஆர்வம் செலுத்துகிறார் வனச்சரகர் சதீஷ்குமார். காட்டு யானைகள் அட்டகாசம் செய்யும் சம்பவத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஒரு வேலையையும் செய்யாமல் தண்டச் சம்பளம் பெற்று தனது பசியையும் தனது குடும்பத்தின் பசியையும் ஆற்றிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. வனச்சரகர் சதீஷ்குமார் போன்றவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய கடமையை நூற்றில் ஒரு பங்கு கூட செய்யாமல் நன்றாக மூக்குப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு தண்ட சம்பளம் பெறுவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது வனச்சரகர் சதீஷ்குமார் தான் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக வேலை செய்ய வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை அலட்சியபடுத்தும் நகராட்சி நிர்வாகம்.நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்குடன் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்படுவதால் உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அலுவலர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதேபோல மாநிலங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் முதல் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவத்தின் நடுவராக முதலில்  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் முடிந்த பின்பு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலிக் பெரோஸ்கான் நடுவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிகாலம் முடிந்த பின்பு தற்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஷ் காசிராஜன் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் செயல்பட துவங்கிய நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் வெளிப்படைதன்மையும், மக்களுக்கான சேவையில் மேம்பாடும் ஏற்ப்பட்டுள்ளது. ஆனால்
பல நேரங்களில் நடுவத்தின் ஆணைகளை சம்பந்தபட்ட துறைகள்  அமல் படுத்தாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளுகின்றனர். இதனால் இந்த நடுவத்தின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளது. 
இது குறித்து தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணபதி பாலசுப்பிரமணியன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 13.07.2021 அன்று கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மாண்பமை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு புகார் தெரிவித்தேன். இது குறித்து விசாரணை மேற்க்கொண்ட நடுவர் அவர்கள் ஆணை எண்.56/ந/2021 நாள் 13.04.2022 ன் படி ஆணை பிறப்பித்தார்கள். அந்த ஆணையில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலைமையில் குழு ஒன்று அமைத்து  கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் விதிகளின் படி முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள். 

ஆனால் இந்த ஆணையை நகராட்சி நிர்வாக ஆணையரகம் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஒளிவு மறைவற்ற ஒப்பந்தபுள்ளி சட்டம் மற்றும் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வரும் சட்டங்களை மதிக்காமல் கடையநல்லூர் நகராட்சியில் அதிகாரிகளும் ஒப்பந்த காரர்களும் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்தனர். இது குறித்து நான் கடந்த 11.01.2022 அன்று உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல், மற்றும் முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்திற்கு அனைத்து ஆவணங்களையும் இணைத்து புகார் செய்தேன். இதனைத் தொடர்ந்து  புகாரை விசாரித்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்,ஒய்வு பெற்ற  ஐ.ஏ.எஸ் அதிகாரி  மாலிக் பெரோஸ்கான் உத்தரவு பிறப்பித்தார்கள். (ஆணை எண் .003/ந/2022, நாள் 21.02.2022). அந்த உத்தரவில் "மேற்க்கண்ட பணிகளை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரிடமோ அல்லது, மண்டல இயக்குனரிடமோ எவ்வித முன் அனுமதியும் பெறாமல் நகராட்சி பொது நிதியின் கீழ் மிகப்பெரிய அளவில் டெண்டர் கோரி தனனிச்சையாக செயல் பட்டதை ஏற்க இயலாது. இச்செயலை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிர்வாகத்தை சீரழிக்கும் செயலாகவே இம்முறைமன்ற நடுவம்  கருதுகிறது. எனவே விதி முறைகளுக்கு புறம்பாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கையினை மேற்க்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரைத்து இம்முறை மன்ற நடுவம் ஆணையிடுகிறது என்று ஆணை பிறப்பித்தார். ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதே போல கடையநல்லூர் நகராட்சியில் ஒப்பந்த புள்ளி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு பதிலாக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 15ஐ தவறாக பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்தது. இது குறித்து நான் கடந்த 04.07.2022 அன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு புகார் செய்தேன். புகாரை விசாரித்த நடுவர் 27.12.2022 அன்று தீர்ப்பளித்தார். அதில் கடையநல்லூர் நகராட்சியில் ஒப்பந்தபுள்ளி மூலம் மேற்க்கொள்ள வேண்டிய பணிகளுக்கு பதிலாக தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 15ஐ தவறாக பயன்படுத்தி  சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி பொறுப்பற்ற முறையில் தன்னிச்சையாக கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் செயல்பட்டுள்ளார் இவ்வாறு கடமை தவறியும், மெத்தனமாகவும் மற்றும் அலட்சியமாகவும் செயல்பட்ட கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் மீது உரிய விதிகளின் கீழ் துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு ஆணையிட்டார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நடுவரின் உத்தரவு நடைமுறை படுத்தவில்லை. 
சட்டரீதியாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் தீர்ப்புகள் சம்பந்தபட்ட துறையினரால் நடைமுறைப்படுத்த படாததால் இந்த அமைப்பின் நோக்கமே கேள்வி குறியாகியுள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மீது புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் இந்த நடுவத்தின் மீது நம்பிக்கை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தாங்கள் இதில் தலையிட்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணைகளை உடனுக்குடன் செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் புகார் தந்தவருக்கு போலீசார் அனுப்பிய எக்கு தப்பான தேதியில் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

வருடத்தில் விசேஷமான மாதம் என்றால் அது பிப்ரவரி மாதம் தான் பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை 28 நாட்கள் தான் இருக்கும், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிப்ரவரி 29ம் தேதி வரும். கடந்த ஆண்டு லீப் ஆண்டு என்பதால் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தது. ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் தான் உள்ளது. நிலத்தகராறு புகாரை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போலீசார், பிப்ரவரி 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் நேதாஜி தெருவைச் சேர்ந்த லிங்கத்துரை என்பவருடைய மகன் வசந்த். இவரது பூர்வீக வீடு, தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பூர்வீக வீடு மற்றும் நிலம் தொடர்பாக வசந்துக்கும், அவருடைய உறவினரான செல்வராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தூத்துகுடி தட்டார்மடம் காவல் நிலையத்தில் வசந்த் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் வசந்துக்கு சம்மன் அனுப்பினர். அதில், "தாங்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக தட்டார்மடம் காவல் நிலையத்தில் 29-2-2025 அன்று காலை 10 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்துக்கு 28 நாட்களே இருந்தது. ஆனால் பிப்ரவரி 29-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் தவறுதலாக சம்மன் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்ய ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற நகராட்சி பில் கலெக்டருடன், இடைத்தரகர் கைது!

அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள். அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசில் மக்கள் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை எதிரொலிக்கும் விதமாக அடிக்கடி யாராவது ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்கிறது. மக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்காமல், அவர்கள் மீது முறையாக புகார் அளிக்க தொடங்கினால், லஞ்சம் கேட்பது கண்டிப்பாக குறைந்துவிடும். பெரம்பலூரில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்த அவரது நண்பரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மூலம் வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மாட்டி விட திட்டம் தீட்டியுள்ள சுபாஷ் சந்திரபோஸ், 

வேல்முருகன் என்பவர் பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீடு கட்டும் பணிகளை பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சோ்ந்த ரெங்கசாமியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 35) என்பவர் கவனித்து வந்துள்ளார். இவர் வேல்முருகனின் நண்பர் ஆவார். சுபாஷ் சந்திரபோஸ் மூலமாக வேல்முருகன், தனது புதிய வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகர் எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த 54 வயதாகும் சிவக்குமார் மற்றும் இடைத்தரகரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்த 38 வயதாகும் ராமு ஆகியோர் சுபாஷ் சந்திரபோசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ் சந்திரபோஸ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சுபாஷ் சந்திரபோசிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கொடுத்தனுப்பினார்கள். அதனை சிவக்குமார், ராமுவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தாரக்ள். அதன்படி சுபாஷ் சந்திரபோஸ் பெரம்பலூர்-துறையூர் சாலையிலுள்ள நகராட்சி வரி வசூல் மையத்திற்கு சென்றார். பின்னாடியே லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும் அங்கு மாறுவேடத்தில் சென்றார்கள்.

தொடர்ந்து அவர்கள் அந்த அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அங்கு சுபாஷ் சந்திரபோசிடம் இருந்து பணத்தை இடைத்தரகர் ராமு வாங்கி சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று சிவக்குமார், ராமு ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், உலக அளவில் புகழ்பெற்ற நறுவி மருத்துவமனையில், புதிய மருத்துவ முறையை பயன்படுத்தி இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி மூளையில் அரிய அறுவை சிகிச்சை

நறுவி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.. நிறுவி நிறுவனத் தலைவர் டாக்டர். ஜி.வி.சம்பத் பாராட்டு!!

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம், சர்வதேச அளவிலான ஹென்றி போர்ட் மருத்துவம் உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவமனை குழுமமாகும், இந்த மருத்துவமனையின் கிளையான உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் நறுவி மருத்துவமனையில், அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையிலுள்ள இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த 55 வயது நபரை நறுவீ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட புதிய மருத்துவ முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அவரை காப்பாற்றினர். இதுகுறித்து நறுவீ மருத்துவமனை நிறுவனத் தலைவர் முனைவர். ஜி.வி.சம்பத் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சார்ந்த முரளி என்ற 55 வயதுடைய நோயாளி ஒருவர் மூளையில் இரத்த குழாய் வெடித்து வீக்கத்துடன் சுய நினைவு இல்லாமல் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரக்கு மூளையின் இடது புற இரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை மூளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பால் ஹென்றி தலைமையில் மருத்துவர்கள் டாக்டர். பூபேஷ் புகழேந்தி, டாக்டர். சிவகுமார், இதய அறுவை சிகிக்சை நிபுணர் டாக்டர். விநாயக் சுக்லா தலைமையில், டாக்டர். ரே.ஜார்ஜ், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர். சரவணன்,  டாக்டர். ராஜசேகர் கொண்ட குழுவினர் இணைந்து அறுவை சிகிச்சை பணியைத் தொடங்கி, இந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மூளைக்கு இரத்தம் செல்லாமல் இருக்க இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூலம் இதயத்தை தற்காலிகமாக நிறுத்தி இயந்திரம் மூலம் செயல்பட வைத்து மூளைக்கு இரத்தம் செல்வது தடுக்கப்பட்டது. வழக்கமாக மனித இதயத்தின் வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ் கொண்டதாக இருக்கும். இதனை 18 டிகரி செல்சியசாக குறைத்து மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்பு மூளையில் அறுவை சிகிச்சை மூலம் இரத்த குழாயில் ஏற்பட்ட வெடிப்பை சரிசெய்தனர். பிறகு மீண்டும் இதயத்தை வழக்கமான வெப்ப நிலைக்கு கொண்டு வந்து அதனை மீண்டும் செயல்பட வைத்தனர்.

இந்த முறையான அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதும் மற்றும் அரியதுமான ஒன்று. நாட்டிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதன் மூலம் இம்மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்த நோயாளி முரளி கூறுகையில் எனக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டவுடன் நான் சுய நினைவை இழந்தேன். எனது குடும்பத்தினர் என்னை குப்பம் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் என் நிலைமை மோசமாக உள்ளதாகவும் உடனே வேலூர் நறுவீ மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியதால் நான் இங்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்தேன். அதை தொடர்ந்து இம்மருத்துவமனை மருத்துவர்கள் எனக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து என் உயிரை காப்பாற்றினர். இப்போது நான் முழு உடல் நலம் பெற்று எனது அலுவலகப் பணியை சிறப்பாக செய்து வருகிறேன் என்றார். இந்த அரிய வகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பாராட்டினார். இந்நிகழ்வில் நறுவீ மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர். அரவிந்தன் நாயர், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். ஜேக்கப் ஜோஸ் மற்றும் நோயாளியின் குடும்பத்தினர் என பலர் உடனிருந்தனர்.

Saturday, 1 March 2025

தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!

சென்னை பல்லாவரத்தில் 18.02.2025 அன்று தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டமும் நிர்வாகிகள் அறிமுகவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. 

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர், இதை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் ( www.tnfcc.in) என்கின்ற வணிகர்களுக்கான இணையதளம் வெளியிடப்பட்டன.  இந்த இணையதளம்  மூலமாக வணிகர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்றும் வணிகர் சங்கங்களும் இதன் மூலமாக கூட்டமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பானது தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களை ஒன்றிணைத்து வணிகர்களின் நலனில் அக்கறைக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பது மற்றும் அரசு மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் கொண்டு சேர்ப்பது, வணிகர்களுக்கு  நல்லதோரு தோழனாய் இந்த கூட்டமைப்பு செயல்படும் என்றும் அதில் புதியதாக தொழில் முனைவோர்க்கு தேவையான தகுந்த ஆலோசனைகள் வழங்கி அவர்களை தொழில் தொடங்க வைப்பது போன்ற பல்வேறு நற்செயல்கள் மூலம் வணிகர்களின் நன்மைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த கூட்டமைப்பு முன்நின்று செயல்படுத்தும் என்று இக்கூட்டமைப்பின் மாநில தலைவர் டாக்டர்.ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.

இந்த மாபெரும் கூட்டமைப்பின்  நிர்வாகிகளாக  மாநிலதலைவர். ஶ்ரீனிவாசன், மாநில பொதுசெயலாளர் குகன், மாநில பொருளார் புதியசெல்வம், மாநில சட்ட ஆலோசகர் பாலாஜி, மாநில முதன்மைச் செயலாளர் காளிமுத்து, மாநில துணைத்தலைவர் அப்துல்லா, மாநில துணைத்தலைவர் சிராஜீதின், மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் சித்ரா, சங்கரி, ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...